Tuesday, March 28, 2017

ஆர். கே. நகர் இடைத்தேர்தல் தற்போதைய நிலவரம்- உள்ளூர்வாசியின் குரல்


 Paul Pown Raj and Thirumurugan Nandagopal
மார்ச் 28, 2017 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், ஆர். கே நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா அறிவிக்கப்பட்டு, அவர் சட்டமன்ற அதிமுக தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்ட நிலையில், அன்றைய முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் (ஓ.பி.எஸ்) சசிகலா தலைமைக்கு எதிராக அணிவகுத்தார். உருட்டப்பட்ட அரசியல் பகடையில் ஓ.பி.எஸ் முதல்வர் பதவி இழந்தார்; சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார்; பின் TTV தினகரன் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார்; எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர் ஆனார். இவை அனைத்தையும் தாண்டி கட்சிப் பெயர், இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை இழந்த நிலையில் தினகரன் வேட்பாளராக ஆர்.கே. நகரில் போட்டியிடுவது என பல்வேறு எதிர்பாராத திருப்பங்களை தமிழக அரசியல்
கண்டுள்ளது.

ஆர்.கே. நகர் தேர்தல் தமிழக அரசியலில்  இன்னும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று பலரும் நம்புகின்றனர். பொது ஊடகங்கள் மீதான நம்பிக்கை குறைந்து வரும் வேளையில், நானாகவே என்ன நிலவரம் ஆர்.கே. நகரில் என்று அறிய என் கல்லூரி நண்பரும் ஆர்.கே. நகர் தொகுதிவாசியுமான முருகன் நந்தகோபாலிடம் நடத்திய உரையாடலை உங்களோடு பகிர்கிறேன். 

கேள்வி:
வணக்கம் முருகன், உங்களைப் பத்தி சொல்லுங்கள், நீங்க என்ன பண்றீங்க? எவ்வளவு வருடங்களாக ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாழ்ந்து வருகிறீர்கள்?

பதில்:
நான் பிறந்ததும் இங்கு தான், வாழ்வதும் இங்குதான். நான் முனைவர் பட்டம் (Ph.D) உயிர் தொழில் நுட்பவியல் (Biotechnology) பிரிவில் முடிக்கும் தருவாயில் உள்ளேன். எங்கள் வீட்டில் 13 ஓட்டுகள், உறவினர்களுக்கு 25 ஓட்டுகள் என மொத்தம் 38 ஓட்டுக்கள் இந்த ஆர்.கே. நகர் தொகுதியில் எங்கள் குடும்ப உறவினர்களுக்கு உள்ளன.

கேள்வி:
இந்த இரண்டு வருடங்களில் ஆர்.கே. நகர் சந்திக்கும் மூன்றாவது தேர்தல் இது, இதை எப்படி பார்க்கிறீர்கள்? தேர்தல் சூடு பிடித்துள்ளதா?

பதில்: 
2001 ல் தொடங்கி இன்று வரை இந்த தொகுதி அதிமுகவின் வசம் உள்ளது. மறைந்த எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே இந்தத் தொகுதி அதிமுக கோட்டையாக இருந்துள்ளது. ஆனால் இந்த தொகுதி ஒரு புறக்கணிக்கப்பட்ட தொகுதி. 2015 ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா MLAவாக ஆன பிறகு இது VIP தொகுதியாக மாறியது. ஊடகங்கள்  எங்கள் தொகுதியை கவனம் செலுத்த ஆரம்பித்ததே ஜெ. வருகைக்குப் பின்தான்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக தேர்தல் வருவது உண்மையில் வருத்தமே. ஆனால் அது எங்களுக்கு ஒன்றும் கடினம் இல்லை, காரணம், யார் MLA வாக இருந்தாலும் எங்களுக்கு எதுவும் நடப்பதில்லை, அதனால் MLA இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன என்ற மனநிலையே. தேர்தல் வேலைகள் இப்போது தான் ஆரம்பித்துள்ளன. தற்போது வரை சில கட்சிகள் களத்தில் மும்மரமும், சில கட்சிகள்  நிதானமும் காட்டுகின்றன.

கேள்வி:
பணப்பட்டுவாடா ஆரம்பம் ஆகிவிட்டது என்றும்,  1000, 2000 இல்லை 10,000 ரூபாய் வரை விநியோகம் என்ற செய்திகள் வருகிறதே இது உண்மையா?

பதில்: 
இப்போது மட்டும் அல்ல கடந்த மூன்று தேர்தல்களிலும் இது போன்ற பேச்சுகள் அதிகம் இருந்தன. ஆனால் உண்மையில் அப்படி எதுவும் கொடுக்கப்படவில்லை.

தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின் ராயபுரம் தொகுதியின் சில பகுதிகளும் இணைக்கப்பட்டு பறந்து விரிந்த தொகுதியாக உள்ளது ஆர்.கே. நகர். புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளால் மீனவர்கள், கூலித் தொழிலாளர்கள், படிப்பறிவு குறைவான பாமர மக்கள் நிறைந்துள்ள தொகுதியாகவும், அவர்கள் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதாகவும் அமைந்துள்ளது. இதனால் அடிப்படையாக சின்னம் பார்த்து வாக்களிப்பவர்கள் இங்கு அதிகம்.

தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்தாலும் கொருக்குப்பேட்டை போன்ற சில பகுதிகளில் அதிகமாக நடக்கும். தமிழ்நாட்டில் மற்ற தொகுதிகள் போல 'பூத் சிலிப்' உடன் உள்ள எண்ணை குறித்து சென்று யாரெல்லாம் அந்தக் கட்சிக்கு வாக்களிப்பார்களோ அவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதுவும் 5000 ரூபாய் கொடுக்க கட்சித் தலைமைகள் முடிவு செய்தாலும் அது 1000, 2000 தான் வாக்காளர்களை வந்தடையும். அதுவும் குறிப்பிட்ட ஏரியாக்களில், ஓட்டுப் போடுவார்கள் என அறியப்பட்டவர்களுக்கு மட்டுமே. இன்னும் இந்த முறை பணப்பட்டுவாடா ஆரம்பமாகவில்லை.

கேள்வி:
முன்னாள் முதல்வர் மறைவிற்குப் பின் நடக்கும் இடைத்தேர்தல், இந்தத் தேர்தலில் மிக முக்கிய பிரச்சனைகளாக ஆர். கே. நகர் தொகுதி மக்கள் பார்ப்பது என்ன?

பதில்: 
ஆர்.கே. நகர் தொகுதி மக்களைப் பொறுத்தவரை எதிர்பார்ப்பு என்பது எப்போதுமே அதிகமாக இருந்ததில்லை. 2001ல் இருந்து அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக வென்றிருந்தாலும் 2015ல் ஜெ இங்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு வரை இந்தத் தொகுதி பெரிய மாற்றத்தைக் கண்டதில்லை. ஆனால் ஜெ இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஒரு ஐ.டி.ஐ கல்லூரியும், ஒரு கலை அறிவியல் கல்லூரியும் நிறுவப்பட்டன. வ.உ.சி. நகர் ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள அரசுப் பள்ளி, கட்டிட வசதிகள் மேம்படுத்தப்பட்டு கல்லூரியாக தரம்  உயர்த்தப்பட்டுள்ளது. ஜெ வின் வரவிற்குப்பின் நிறைய சிற்றுந்துகள் தொகுதியின் மூலைமுடுக்கு எங்கும் வலம்  வருகின்றன. இது போன்ற பல வசதிகளும், மேம்பாடுகளும் ஜெவின் முதல்வர் தொகுதி என்பதால் ஏற்பட்டது என்று சொன்னால் மிகையாகது.


Chat Conversation End
தொகுதியின் நீண்ட கால பிரச்சனைகள் என்றால் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தின் அருகில் ரயில்வே லெவல் கிராஸிங்கில் மேர்பாஸ் மற்றும் வினோபா நகரை இணைக்கும் வகையில் ஒரு மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.  ஐ.ஓ.சி பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்குடை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. மேலும், ஐ.ஓ.சி பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு போன்ற முக்கிய பகுதிகளுக்குச் செல்ல போதிய பேருந்து வசதி இல்லை.

கொடுங்கையூர் பகுதியில் நீண்ட நெடிய தூரத்திற்கு குப்பைக் கிடங்கு இருப்பதும், அதிலிருந்து எரிக்கப்படும் குப்பையின் புகையும் அந்த பகுதி மக்களுக்கு மிகப்பெரிய சுகாதாரக் கேடாக அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் சென்னையின் மையப் பகுதியான வண்ணாரப்பேட்டை ஏரியாவில் குறுகிய சாலைகளும், அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. மகாராணியில் இருந்து பாண்டியன் தியேட்டர் வரும் சாலையை அகலப்படுத்துவதில் வணிக வளாகங்களால் உள்ள நடைமுறை சிக்கல்கள் களையப்பட வேண்டியது நீண்ட நாட்களாக சவாலாக உள்ளது.

தொகுதியில் அடிப்படையாக தண்ணீர் பிரச்சனை பிரதானம். சில ஏரியாக்களில் லாரிகளில் வரும் தண்ணீரையே நம்ப வேண்டிய நிலை. மேலும் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு என களையப்படாத சிக்கல்களும், நிறைவேற்றப்படாத பணிகளும் நிறைய உள்ளன.

கேள்வி:
ஜெ மறைவிற்குப் பின் கட்சி சின்னத்தை இழந்த நிலையில் சசிகலா அணியில் தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார்.  அதே நேரத்தில் பன்னீர் செல்வம் அணியில் மின் விளக்கு சின்னத்தில் மதுசூதனன் போட்டியிடுகிறார். இவர்கள் இருவரின் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது?

பதில்: 
ஜெ மரணத்தில் உள்ள மர்மங்களும், அது சம்பந்தமாக சசிகலா தரப்பு மீது உள்ள சந்தேகங்களும் வலுவாக தொகுதி மக்கள் மத்தியில் உள்ளது. தினகரனுக்கு கடும் எதிர்ப்பலை வீசுவதை உணர முடிகிறது. இருந்தாலும், தினகரன் அணி சார்பில் தேர்தல் வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஓட்டு சேகரிக்க ஊர்வலமாக செல்வது, கட்சியினர் கொண்டுவரும் மாலைகளை அணிவிப்பது, ஆரத்தி எடுப்பது போன்ற வேலைகளுக்கு தக்க சன்மானம் வழங்கப்படுகிறது. எனக்குத் தெரிந்த வட்டாரங்களில் இது போன்ற கட்சிப்பணி செய்யும் பலரும் கட்சி வெற்றியை விட பணத்தை எதிர்பார்த்தே இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். இவர்களுக்கு தினகரனுக்கு ஓட்டுப் போட விருப்பம் இல்லை என்றாலும் கொடுக்கப்படும் கையூட்டிற்கு இந்த சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன. சில நேரங்களில் வலுக்கட்டாயமாக ஆரத்தி எடுக்கும், மாலை  போடும் சூழலும் இல்லாமல் இல்லை. இவ்வாறாக தினகரன் தரப்பு தொகுதியை வலம் வருகிறது.

தற்போதைய சூழலில் தினகரனுக்கு வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது. தினகரனுக்கு எதிராக உள்ளடி வேலைகளும் நடைபெறலாம். இருந்தாலும் எதையும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. 2015 இடைத்தேர்தலில் மதியம் வரை 50% ஆக இருந்த வாக்குப்பதிவை 85% ஆக உயர்த்தும் அளவிற்கு அதிமுகவினர் 'கட்சிப்பணி' செய்தனர். இதனால்தான் சாதாரண வெற்றியைப் பெற வேண்டிய ஜெ, ஒரு இமாலய வெற்றியைப் பெற்றார். அதுபோல முறைகேடுகள் நடைபெறாது என்று யாராலும் சொல்ல முடியாது.

ஓ.பி.எஸ் அணியைப் பொறுத்தவரையில் மதுசூதனன் வண்ணாரப்பேட்டை வாசி, மண்ணின் மைந்தன். தொகுதியில் 40 வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் நல்ல அறிமுகம் உள்ளது. ஆனாலும் அவரால் ஓட்டுக்கள் பிரியுமே தவிர வெற்றி பெறுவாரா என்று சொல்வது கடினம்.

கேள்வி:
இப்போதுள்ள நிலையில் அதிமுக ஓட்டுகள் தினகரன், பன்னீர் செல்வம் என  பிரிவதால் இது திமுகவிற்கு சாதகமாக அமையாதா?

பதில்: 
திமுக வேட்பாளர் மருதுகணேஷ் உள்ளூர் ஆள் தான்; சாமானியர்; வக்கீல். திமுகவிற்கான ஓட்டுகளும், அதிமுக எதிர்ப்பு ஓட்டுகளும் இவருக்கு சாதகம். திமுக 2016 தேர்தலில் சுமார் 57,000 ஓட்டுகளை வாங்கியது. இந்த முறை சராசரி அந்த ஓட்டுக்கள் விழும், மேலும் கூடுதல் ஒட்டுக்கள் வாங்க வாய்ப்புள்ளது. அது போக அதிமுக அணியின் ஓட்டுப் பிரிவது திமுகவிற்கு சாதகம் தான். ஆனால் அது வெற்றியை நோக்கி எடுத்துச் செல்லுமா என்று உறுதியாக கூறமுடியாது.

திமுக, சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி மத்தியிலேயே கடும் போட்டி நிலவுகிறது. மற்ற இடைத்தேர்தல்கள் போல யார் வெற்றி பெறுவார் என்பதை உறுதியாக சொல்லிவிட முடியவில்லை. இதில் பணம் வெல்லுமா இல்லை மக்கள் வெல்வார்களா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

கேள்வி:
மற்ற கட்சியினரும் போட்டியிடுகின்றனர் அவர்களில் யாருக்கேனும் தொகுதியில் வரவேற்புள்ளதா? வெற்றி வாய்ப்பு உள்ளதா?

பதில்: 
திமுக, சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி தவிர்த்து பாஜக மற்றும் நாம்தமிழர் கட்சி ஓரளவிற்கு வெளியே தெரிகின்றன.

ஜெ அண்ணன் மகள் தீபாவைப் பொறுத்தவரையில் ஜெவைப் போல தோற்றம் உள்ளதால் சில ஆயிரம் ஓட்டுக்கள் விழலாம். ஆனால் தீபாவிற்கு டெபாசிட் கிடைப்பதே சந்தேகம் தான். பாஜகவிற்கு வாக்களிக்கும் அளவிற்கு 'பக்தர்கள்' இங்கு அதிகம் இல்லை. நாம் தமிழர் கட்சிக்கு கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் வரவேற்புள்ளது. இருப்பினும், இவ்விரு கட்சிகளும் தலா 4000 அல்லது 5000 ஓட்டுகள் வரை வாங்கலாம்.


கேள்வி:
இந்த தேர்தலால் ஏதேனும் குறிப்பான ஒரு மக்கள் பிரச்சனை தீர்க்கப்படும் என எதிர்பார்க்கிறீர்களா?

பதில்: 
என்னைப் பொறுத்தவரையில் இந்தத் தேர்தலால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை. ஒருவேளை இந்த ஆட்சி கலைந்தால் இன்னொரு தேர்தல் வர வாய்ப்புள்ளதையும் எதிர்பார்க்கிறோம். இந்தத் தேர்தலுக்குப் பின் அதிமுகவின் இரு அணிகள் தங்களுக்குள் ஒரு புரிதலை எட்டி அதனால் கட்சி மறுஉருவாக்கம் ஏற்பட்டால் தமிழக அரசியலில் மாற்றம் வரலாமே தவிர இந்தத் தேர்தலால் ஆர்.கே. நகரில் எந்தப் பிரச்சனையும் தீர்க்கப்படப்போவதில்லை.

                                                         **************************

$திட்டமிடல், கேள்விகள், எழுத்துநடை - PPR 
$பதில்களின் கருபொருள், தகவல் - TMN 

**இந்த உரையாடல் எந்த பொருளாதார, அரசியல் விருப்பு வெறுப்பின்றி, தொகுதியில் நடக்கும் சூழலை பிரதிபலிக்கும் என நானும், முருகனும் நம்புகிறோம்.  

***ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் கமெண்ட்டில் தெரிவிக்கலாம். 

***இந்த பதிவு பற்றிய தங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.  நன்றி. 

- Paul Pown Raj (PPR) and Thirumurugan Nandagopal (TMN)

Monday, December 30, 2013

India vs South Africa Test Series - a Disaster or a Blessing in Disguise for India's young brigade


                                     
For I am a lover of cricket, at most times which is the only other thing I am interested in, apart from my family, friends and profession. Sometimes when I am shut down by failure, I look up to some cricket videos to wake me up and at times it keeps me in my bubble to combat the taxing demands of life and pressure at the office. I watched the India tour of South Africa - Test series 2013 with great interest as it had a lot to play and watch for.

India had the best ODI record in 2013 winning six out of seven seriesincluding the Champions Trophy in England. Their Test record was also not bad with six Test match wins in a row before this series, albeit all of them coming at home.  Importantly, the last two Test series away from home India lost eight in a row. The series was also clouded by administrative conflicts between the two boards and it made a lot of people angry – the SA supporters, players, and even journalists. When the Indian team arrived in South Africa, Dhoni was even asked what he would do if someone threw something into the field from the stands in anger. South African media was looking to put off the Indian side whatever the way possible, not to forget the broadcasters who had a video tape under the caption ‘Kohli softened up’ after he got some blows from bouncers in the ODI series. To add to the misery, India were beaten comprehensively 2-0 in ODI series and no one gave India a chance, not even the most optimists.

Indian batting was under the scanner, as for the first time none of the Fabulous Four (Dravid, Tendulkar, Laxman and Ganguly) playing and no Sehwag, Gambhir too. Even the experienced seniors failed to rescue the team in the last eight defeats abroad. The most experienced batsman in the lineup was Kohli with 19 Test matches, among which only seven Test matches in abroad. It was a completely inexperienced batting lineup and there were question marks on their ability to cope up against the best bowling attack in the world.  Not  to forget that this South African team is no. 1 Test team in the world and have not been beaten in a series since March 2009. The world’s top two* bowlers are the Proteas fasts, bowling in the series along with Morne Morkel (ranked 12*). There were questions about Indians as flat track bullies and would have trouble against bouncing balls.

However, this young batting lineup stood firm and had answers for the South African bowling attack as they piled more than 400 runs in the second innings of the first Test, which is remarkable as it is only the fifth time a touring team had scored more than 400 in a Test innings in South Africa in the last four years.  India dominated the first four days of the first Test at Johannesburg and almost pushed South Africa to the brink. In the second Test, India was not out of the game until the last day. India probably lost the second Test and as a result the series because of a poor morning session on Day five. To have countered this South African team until the last session of the series with a victory is itself a big achievement considering how India entered the series.

If you are a reader of headlines, the end result is a loss 1-0 for India. One can bark aloud about the Indian team doing poorly in foreign conditions again. To have been beaten again is tough as it lingers not only in mind but also it goes in the records as another series loss away from home. But if you are a cricket lover and someone who looks beyond the results, statistics and headlines, then you have a lot to praise for this Indian team performance. Moreover, this defeat unlike the previous two series in England and Australia was not in surrender but was a battle that this young Indian brigade went toe to toe with the Saffers.

The batting of Pujara, Kohli and Rahane were highly impressive and they were the top three in the run-getters list in the series above all the South African players. They were not afraid to take on the bouncers and played the pulls very well and were severe on over pitched deliveries and made sure to dispatch them to the boundary. The most noticeable thing was their temperament to leave the balls outside off stump, and in my opinion these guys have even outscored their seniors of the previous era as well as their opponents. Murali Vijay whom many doubted about his spot in the Test side, did a fabulous job in blunting the new ball and making it easier for the rest of the batters.

The bowling attack did well in the first Test. But in the second Test it failed due to the negative strategy of bowling with the old ball to slow down the scoring rate. Ashwin who was the quickest to 100 wickets earlier this year did not acclimatize to the conditions and he must work on the speeds, length of his bowling. Jadeja or Ojha might be the way ahead in Tests abroad. Shami on his first tour abroad did an exceptional job with wickets throughout the series. But India lacked the ‘X-factor’ in the bowling. It would not be a bad idea if India look at Umesh Yadav as the pace option to hit the pitch hard and fast to make it difficult to score, a kind of job that Morne Morkel does for South Africa. India might need to sort out how they manage the work load of their quickies with only four specialist bowlers and no street-smart part time bowler in the lineup.

In nut shell, India can take loads of positives especially from this batting performance as they travel to New Zealand, England and Australia after this. One can hope that if this batting lineup bats like this in the tours to come, with help from the bowling attack, they can really post big challenges as a team.  Time will tell, if this Indian team and its batting line up have a legacy to make. As of now, India gave South Africa a run for their money in the concluded Test series, which the Indian team and their fans can hold their heads high and be proud, as not many teams have managed to do so.

Any comments and feed backs will be of appreciation and thanks for your time and efforts in reading this piece.
(*as on December 30, 2013; #those series started and concluded in 2013)




Tuesday, November 13, 2012

A Tug of War on the Cricket field - India Vs England Test Series 2012:

       For anyone who hears cricket news, it is yet another Test series in India hosting England. But for any decent cricket follower (let alone the fans from either country), it is going to be a tough war on and off the cricket field. The reason it is off the field is, both cricket boards ECB and BCCI want to rip each other hair out through this.


       Ever since India won the World Cup in 2011, it has been quite a turnaround of things in World cricket especially in Test cricket. India looked like a giant in world cricket both in administration and on the field having won the world cup and their last Test series in South Africa to retain their No. 1 ranking in Test cricket. For some reasons, the traditional cricketing monsters England and Australia didn’t find it appropriate. Noticeably, India was adamant and not going with the choice of the majority with regards to UDRS (Umpire Decision Review System). It kind of gave an exterior idea that India is influencing cricket to the extend it questions the fraternity of common interest. To add to the predicament, England had its grief with its one or few of the players having priorities for IPL. 


       It is with this situation India traveled to England for a Test series in 2011. Some of the England players like Chris Tremlett was publicly demanding for tough green top pitches to be offered to India for that series in England. Indians were going into the series from a successful tour of West Indies where the wickets were flat and the opponents’ batting was nothing extraordinary. England had a big trap for India that the visitors could not have even dreamt of. Indians played just a three day game and got hammered all over the place and ended up witnessing green top pitches laid to swallow them in the following test match series and in the blink of the eye the end result was a 4-0 whitewash. After this, when toured Australia in December 2011, India asked for more practice matches, Cricket Australia gave India what they wanted in a manipulated or disguised form. Their first tour game was a two day game on a flat track and their second was on a turner with Ashwin and Jon Holland the two spinners sharing ten wickets between them. But the Test match series that followed had all the matches on pitches looking like green grass bowls and the end result was the same a 4-0 whitewash again, at the hands of Australians.

        Having had their lessons learnt the hard way, with the knock to their head still ringing in ears, India will host England for four Test match series starting this Thursday, on November 15. For the first time in my knowledge, the BCCI is in the place to devise plans and sketch maps for its team. One could argue they were forced or indulged in it, either way they are into it smartly. People say good or bad, what goes around comes around. It has a come as a 'boomerang' for England. Now they face the stern acid test against spin bowling come this series. BCCI has already made sure that England receives nothing less than the hospitality that was offered to India during its tour last year. First of all, the three tour games (already completed) for England in Indian soil are on green top pitches, with little exposure to quality spin bowling if not completely devoid. Noticeably, among the three different teams (below par) that played against England, only Amit Mishra was the genuine spinner and even he did not bowl that many overs. In fact he did not bowl any overs in the second innings of the recently concluded tour game for Haryana. Having faced less than 11% of spin bowling in the second innings in the tour games, Cook the England skipper stated that his team would have liked to face more spin bowling. Whatever the spin bowling practice they getting are from local net bowlers but it would be interesting to see if that would be enough to face Ashwin and Ojha in the series. Cook feels it is sufficient but not satisfactory, but it puts a question on anyone’s mind that if net bowling practice is enough why wouldn’t Swann and Panesar be not good enough for England’s preparation against Ashwin and Ojha respectively. 

        This state of things are apparent for England after having lost the Test series 3-0 to Pakistan spin duos Saeed Ajmal and Rahman, followed by a humiliating loss to India by 90 runs to Indian spinners in the T20 world cup. Indeed, experienced cricket experts like Geoff Boycott have made their minds clear about England’s chances having played so poorly against the turning ball so far. BCCI and India plan to take advantage of the opponents’ weakness against spin bowling. 

        Sometimes there is nothing gentle in the ‘gentlemen’s game’. Revenge might be a word of arrogance and over confidence but India would certainly look to pay back. It will not only be a great test of skills but also be a test of characters for the English batsmen as they have to play out the emerging spin couple of Ojha and Ashwin. It will certainly test their patience to wait for bad balls to score runs. 

        The biggest asset to England is their pace battery with Anderson, Broad and Bresnan. Finn and Broad are having problems with their fitness but I am sure Broad will be leading the attack for the first test. If they can restrict India to anything less than 400 in the first innings, then automatically it would pile the pressure on Indian bowling attack. The another key would be their batting order, with Cook and Trott play waiting game; Pietersen and Prior to play their strokes. The most important component for success in India is having big partnerships and rotating the strike. But it would not be cake walk for the English in the alien conditions. It will be interesting to see how Pietersen responds after his exclusion from the team. Mostly England’s chances of scoring runs will be determined whether he acts as like a caged tiger or a caged mouse.

        From the Indian team point of view, as ever the pace bowling is a worrying sign with Zaheer breaking up way too often even in a recent Ranji trophy game for Mumbai. Often, Umesh Yadav sprays the ball all over the place. Ever since Sourav Ganguly retired from Indian Test cricket, the batting order has been unsettled. To add to this, the Indian openers Gambhir and Sehwag have not stitched together a meaningful match winning partnership for more than a year and a half now. Both of their awry form, along with the inexperienced middle order is a big well to leap over in the quest of making the big score in the first innings of a Test match. It would be interesting to see if Sachin Tendulkar has substantial cricket left in him to score big runs in the series against such a quality bowling attack. Yuvraj Singh who will be the favorite for the No. 6 slot in the batting order will also be a key to India’s bowling with his slow lefties. It will be an old stirred up battle against Pietersen with hispie-chucks’. If the batting order puts runs on the board then India will have an upper edge right through with their spin attack.

        In nut shell, it will be a fascinating series of Test cricket, who knows might be with surprises and amusement with two quality teams one looking to overcome their stature against the weakness written against them and the other looking to give back the sour taste of medicine. 

 Players to watch out: 

England: A.Cook who plays the waiting game will be a pivotal tool for England along with KP to make those big runs. It will be interesting to see how Swann bowl against the better players of spin bowling along with the quickies. 

India: R.Ashwin has been the lead spinner for an year now, almost running through every team he played at home in Test matches. He would be the vital result indicator of the spin acid test for England. It is with him the fate of India’s margin of triumph lies on. In the batting order, Kohli has been in sublime form and he rarely misses out but the one to watch out would be Yuvraj Singh who can take the spinners on when India would look to push the score on, especially if the top order had scored runs. 


All in all, a riveting Test match series of high intensities is on the cards! 

 (I will be happy to have your suggestions and any difference in opinion on this piece of writing)

Thursday, May 19, 2011


அன்புள்ள தந்தையே..

நீங்கள் நீங்கள் தான். பல முறை நான் விரும்பும் முறையில் உங்களை நடக்க வைக்க ஆசை பட்டதோடு மட்டுமில்லாமல், நீங்கள் நீங்களாகவே இருந்ததற்கு வெறுப்பும் ஆகியுள்ளேன். வெளியில் பெண்பால் நண்பர்களிடம், "யாராயினும் அவர்களை அவர்தம் விருப்பப்படி விடுவதே சுதந்திரம்" என்று வெட்டி வீராப்பாய் பேசிவிட்டு உங்களை பேச விடாமல் தடுத்துருக்கிறேன். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சித்தது கூட இல்லை. ஏன், உண்மையில் உங்கள் விருப்பத்தை பற்றி சிந்தித்தது கூடயில்லை. ஆனால் நீங்கள் என் விருப்பத்தை தவிர வேறெதையும் சிந்தித்தாகக் கூட தெரியவில்லை.

இன்று உங்களைப் பார்த்து, "அப்பா மன்னிச்சுருங்க" னு சொல்ல மனசு துடிக்குது. ஆனா, உங்க அன்பான கண்ணைப் பாத்து சொல்ல எனக்கு தைரியம் இல்லையேப்பா.. "எனக்கொரு பொம்பளை பிள்ள இருந்தா என் மேல பாசமா இருந்துருக்கும்" னு நீங்க ஏங்குனதைக்கூட, என்ன ஆச்சு இவருக்கு லூசு மாதிரி பேசுறாரு காலம் போன காலத்துலனு அசட்டை பண்ணிருக்கேன். "உங்களுக்கு என்ன தெரியும்", அடிக்கடி நான் என் தந்தையிடம் பயன்படுத்தும் வரிகள். மாறாக அவரோ, 'இல்லப்பா இப்டி செய்யலாம்'னு கேட்டேன்னு தான் குரலைத் தாழ்த்தி சொல்வார். நீங்க காட்டுன வழில நடந்திருந்தா கூட இன்னைக்கு நான் ஒரு IAS அதிகாரி ஆயிருக்கலாம்.

என் தந்தையை பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் யோசிக்கும் போது 'லட்சியமே இல்லாத மனிதர்' என்று நினைப்பேன். இன்று புரிகிறது அவர் லட்சியமே என்னை சமுதாயத்தில் நல்லா நிலை அடைய செய்வதே என்று. இன்று உண்மையில் புரிகிறது நான் தான் 'லட்சியமே இல்லாது நாட்களைப் போக்கும் கருவேல மரம்' என்று. என் வாழ்க்கையுடன் என் தந்தையின் இலட்சியத்தையும் வீணாக்கிவிட்டேன். சமீபத்தில் ஒரு விழாவிற்குச் சென்ற போது ஒருவர், "இன்னாரின் பையன் போல ஒரு பண்பான ஞானமுல்லா இளைங்கனைப் பார்ப்பது அரிது" என்றார். என் தந்தையின் உதடுகள் மலர கண்ணில் நீர் வழிந்தது. மிகவும் தைரியமான நபர் இப்படி ஒரு இளகின மனமா உங்களுக்கு என்று அதிர்ந்து போனேன்.

என் தந்தை சற்று வித்தியாசமானவர். எப்பிடினா எல்லா தந்தைகளும் தன் மகன் சைக்கிள் பழகும் போது பின்னாலேயே ஓடி வருவார்கள் என் தந்தையோ: நான் 3ம் வகுப்பு படிக்கும் போது. பஸ்ல தொடர்ந்து போக எரிச்சல்; மேலும் என் நண்பர்கள், "டேய் உனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாதுல" என கேக்கும் போது உண்டாகும் கடுப்பு, எல்லாம் சேந்து "நாளைக்கு சைக்கிள்ல தான் போவேன் இல்லேன்னா நான் ஸ்கூல் க்கு போகல" என்றேன். என் முரண்டுத்தனம் என் தந்தையின் இறுக்கத்தை வென்றது. அடுத்த நாள் பள்ளிக்குச் சைக்கிளில் செல்லும் போது, என் நண்பன் "டேய் அங்க பாருடா உங்கப்பா பின்னாடியே ஓடி வாராரு" என்றான். ஆம் நாலு கிலோ மீட்டர் பின்னாலேயே ஓடி வந்து எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதை உறுதி செய்து விட்டுப் போனார். அத்தகைய தந்தைக்கு என்ன செய்தேன்?

இன்றும் பல நேரங்களில் என் தந்தை வெள்ளந்தியாக பேசுவது எனக்கு மிகுந்த எரிச்சலையும், பயங்கர கோவத்தையும் உண்டாக்குகிறது. நான் கோவப்படும் போதும் பொறுமையாக, "எங்கய்யாவ நான் இப்பிடி தான் வஞ்சேன், நீ என்ன வைறப்பா" என்பார். கூடக் கொஞ்சம் திட்டுவேன். ஆனால் என் தந்தையின் வார்த்தையில் அவ்வளவு சத்தியம் உள்ளது.

என் மகன் எனக்கு பெருமையைத் தேடி தருவான் என்ற எண்ணம் அவர் மனதி ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் அவநம்பிக்கை இன்றி இன்றும் தைரியமாகவே உள்ளார். எனக்கோ மனசாட்சி, "நம்மால் அப்பா சிறுமைப் படாமல் இருந்தாலே ஆண்டவன் புண்ணியம்" எனத் தோன்றுகிறது. நம் கர்வமும் தலைகனமும் கை கோர்த்திருக்கும் வரை தலை கால் புரியாது போல. உண்மை விழங்கும் நேரம் வாழ்க்கையின் முக்கிய பகுதிகள் கடந்து விட்டன.

இப்போதெல்லாம், முன்பு கடினமான நேரங்களில் அப்பா நடந்து கொண்டதை நினைத்துப் பார்த்து பிரம்மிக்கிறேன். எவ்வளவு பிரச்சனைகள்? எவ்வளவு போராட்டங்கள்? அந்த நிலையிலும் மனுஷன் நிம்மதியாக தூங்க முயல்வார். "வருத்தப்படுறீங்களாப்பா?" என்றால் "இல்லைப்பா" என்பார். உண்மையை சொல்லுங்கப்பா என்றால், "தூங்காம இருந்தா என்ன ஆகப்போகுது? நம்பிக்கையையும் தைரியத்தையும் விடக்கூடாது" என்பார்.

இந்த வலைப்பூவைப் படிக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் இன்னும் என் தந்தையைச் சேரவில்லை. இருந்தாலும், ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன்.

இப்படிக்கு,
உண்மையில் நேசிப்பதை சொல்ல முடியாத மகன்களின் குரல்.

Friday, February 25, 2011

Strong Contenders of World Cup 2011




Strong Contenders:
The world cup is under way and unlike the previous editions where the only question was whom the Aussies were to face in the final, this world cup provides room for competition. The predictions are like music-chairs for many. The greats like Ganguly, Gavaskar, Viv Richards said there are no ‘favorites’. In other words, they couldn’t pick a team as favorites or they didn’t want to take any risk of picking someone as favorites. Let’s come to the point. What I would be sharing here is about some of the curious insights into this world cup and the strong contenders and factors that would be vital in this tournament.

First of all let’s take the groups and you will see that group B is easy for reserving a place in the Quarter finals. With Zimbabwe, Kenya and Canada merely making up the numbers; SL, AUS, PAK, NZ will easily qualify to the quarter finals. From there, it is just three matches jackpot, anybody can win it. It is that kind of a crazy fixtures which allowed Srilanka to win the event in 1996 in which they won 3 matches due to forfeit by other teams in group stage and won next three games with relatively fresh and unexposed players. That is why this world cup can also be won by even Pakistan or New Zealand.

In Group A, Bangladesh with their local support, spin attack and strong top order will make West Indies and England run for their money, but I don’t see them reaching the quarter finals. Ireland is also expected to give a spring of shock to giants like India, South Africa, West Indies and England. If teams play to even 50% of their potential, India, South Africa, West Indies and England must be through.

But is that enough? The answer is Yes and No. If you closely look at the fixtures, India and Srilanka must win all their matches in group stages to become B1 and A1 respectively, which would give them leverage to play an easy quarter final away and a tough semifinal at home. If that happens, then it will be India vs Srilanka at Wankhade stadium, Mumbai on 2nd April (too early to tell though). Given the knowledge of local conditions, crowd support teams will feel safe at home, but this might backfire as in the semis of 1996 for India. But this time around, if India becomes B1, they will fancy their chance to go all the way truly because of the friendly batting track at Colombo and Mohali where they need to play the quarter and semi in this case. Also it will be early Diwali for India as they most probably face New Zealand on a turner in Colombo. What happens if India becomes B2? You know what; India will face the biggest dark houses Pakistan at Mirpur which will be dangerous purely because of pressure and Pakistan has nothing to lose.

There are a lot of views about the strong contenders of the tournament. With the recent form, I feel the strong contenders line up in the following order India, Srilanka, Australia, South Africa and England. Well Pakistan and West Indies are the two dark houses in each group. Let’s see one by one:
India without any argument has the strongest batting lineup in paper. Sometimes one’s strength is also weakness and it is exactly the same for India. Indian batting had collapsed so often, even in 3 out of 5 matches in the recently concluded ODI series in South Africa. Dhoni and Kris Srikkanth might call it an “Odd Day” but if that odd day is in quarter or semifinals, then they will have to answer a lot. But one positive thing is, with Sachin, Sehwag, Gambhir and Kohli at the top order it has never happened in ODIs. This Indian batting is almost of the same caliber of the Aussie top order in 2003 and 2007 which no teams could breach just like the walls of Troy. But an out of form Yuvraj is a worry there but he can be taken easily. Dhoni’s flexible batting position is a handy option to change the tactics according to the situation.
A lot has also been said about the bowling and yes it is a weakness if you compare it with their batting. If India thinks that they can score the runs which they leak in their bowling, they will be beaten up. The biggest worry in the bowling lineup is the wicket taking option. In cricket, attack is the best way to defend. If India opts to play three seamers and leave Sreesanth, they are striking nails for their own caffeine. With Zaheer, Munaf, rusty Nehra and volatile Harbhajan (if Harbhajan doesn’t get a wicket in his first two overs, he goes wicket less and leaks runs too) it never looks menacing. India must play two spinners against all the teams to give themselves a weapon to threat the opposition. Then the next question comes, who must be left out? If I were Dhoni I will leave Yuvraj and have a specialist spinner in his place because Yuvraj is there mostly for his bowling. But the most practical and suitable option would be to sit out Nehra and play Piyush Chawla. Dhoni need not worry about 20 overs of power play to cope with because full bowling power play and 4 overs of mandatory power play can be exploited by spinners. And India can open the bowling with YK Pathan with Zaheer. India has the captain with best temperament. Overall, it all depends on what final 11 India will play and how well they handle situations. I see India going all the way this time.

Srilanka arguably has the best balanced team by a fair distance. With the three M’s clibre (Murali, Malinga, Mendis) the bowling attack looks more than match winning. Malinga’s injury is a concern for them which might hinder their chances. But he must be fit before the quarters by latest. Kulasekara consistent bowling may not even secure him a place in the final eleven with both the all-rounders Mathews and Thissara Perara doing well with the ball. Fiery Dilshan, solid Tharanga, ever solid Jayawardene and splendid Sangakkara make a solid top order. But the problem in the whole lineup is the fragile middle order with Chamara Silva, Perara and Samaraweera. If the cream of the top order is removed, then there is no sponge (middle order) in the cake it goes to the hard baked layer. Sangakkara’s captaincy is something that is always a big lacuna as far as I am concerned. His attitude in the field will irritate anyone who is watching. He is certainly not captain cool to handle pressure situations. This is one point where others score more than Srilanka. But the around edibility of the team, agility in the field makes them one of the strongest in the tournament.

Coming to the next team it is the mighty Australians who could well be on their way to the fourth consecutive title win. But their batting order doesn’t show solidity after top 4 just like the Srilankans. More worries for Ponting would be the absence of experienced Mike Hussey and the lack of temperament and technique against quality spin bowling by his youngsters. But Aussies always find a way to win. I just remember the Aussies going into a big tournament before with the same problem and win it. It was 2009 in South Africa, Champions Trophy when they had youngsters who were new and unpredictable. But Aussies won the tournament hands down as the top order Watson and Ponting made sure they didn’t lose more than two wickets throughout the series. That’s what is taking responsibility and that’s why they are undisputed Champs. But this time around, in subcontinent conditions I don’t see them scoring a lot of runs especially with the middle order they have. Again Watson at the top of the order will be the key. Aussies have chosen attacking options in bowling which is fantastic. Lee, Johnson, Tait, Watson and Krezja they have the best bowling lineup for the tournament. Many might think they are at wrong place having bowlers who will hit the radar 150 km/h all the time. Aussies have success in India with similar tactics in Test matches when Dravid was the captain. I think that’s their biggest strength. I dare say they have the strongest bowling attack for the tournament. If they manage to put a score of 280 they can fold any team. India would be a bit afraid to face the mighty Aussies at Mohali in Semi. If the Aussies qualify for semi then my money will be on them to go on and win the title, simply because of the experience of being in crunch situations in finals a lot of time before.

South Africa and ‘Chokers’ are the two words closely related as far as World Cup is concerned. But this time they have Amla, AB devilliers, Smith in the form of their life. The pace duo of Steyn and Morkel is the most menacing of all and could be a nightmare for any opener even in the flat low tracks. However, I am not sure of their bowling tactics. I haven’t seen their secret weapon Imram Tahir so far (Good on You SA, finally you got one instead of donating players like Pieterson and Trott). His figures are quite admirable and we will wait to see him before we comment. Dropping Boucher could prove costly as he is not only the best keepers around but also a dashing option to utilize the power plays. The lower middle order of Du-Plessis, Botha, Peterson looks long-tail and lack power hitting options. I heard that SA will play three spinners in most matches which will be a boomerang as far as I am concerned. Because they most probably will have to face Pakistan in quarters and if they qualify will have to face SL in semis where they will need to change the tactics to all pace attack. If they continue to play spin, well that will be quite fascinating to watch the Asians milking the inexperienced spinners of SA. Unlike Australia, South Africa are not playing to their strength, instead they are taken up by the conditions which is hard to fathom. One has to wait and watch how far they go this time around. I will be surprised if they reach the semifinals and win it.

England has been building a solid team since the tour of India in 2008. Andy Flower, the coach must be given a lot credit for it. There are a number of injury woes which clouds the English team which tends to upset them. The choice of opening with Kevin Pietersen doesn’t seem to be wise as the middle order lacks prolific scorers of the middle overs. Collingwood has been struggling for a while, loss of Eoin Morgan due to injury, no second spinner in the team are the worries for the team. Recovery of Broad and Bresnan, with likes of Swann (easily my best contemporary off-spinner) and Anderson make a formidable bowling attack. Collingwood’s cutters will be a plus and will get him loads of wickets. The good thing is unlike all the other teams, their lower order has potential batsmen like Bresnan, Broad, and Swann. They might well play Australia in the quarters at Ahmedabad and might well be the 5th team of the tournament and the first one to miss the semifinal bus among the Strong Contenders.
My Quarter finals prediction:
Match fixture Possible predicition Venue Favorites
A1 Vs B4 Srilanka vs West Indies Mirpur Srilanka (C)
A2 Vs B3 Australia Vs England Ahmedabad Australia (D)
A3 Vs B2 Pakistan Vs South Africa Mirpur Pakistan (E)
A4 vs B1 New Zealand Vs India Colombo India (F)

My Semifinals prediction:
Winner C Vs Winner E Srilanka vs Pakistan/ South Africa Colombo Srilanka (1)
Winner D Vs Winner F Australia Vs India Mohali Australia/India (2)

Finals:
Winner 1 Vs Winner 2 Srilanka Vs Australia/India Mumbai India/Srilanka/Australia


I feel India, Srilanka and Australia will be the three teams among which two will contest in the finals of 2011 WC. Having said that, as they say “Cricket is funny old game”, which has surprised many and will continue to do so.. Anyways, sit back and enjoy the thrilling contest and subcontinent run feast. Watch out for my predictions and get back to me during and after the world cup. Cheers…

Cricket Fanatic,
Paul Pown Raj

Sunday, January 30, 2011

அதிமுக ஆட்சி - காலத்தின் கட்டாயம்

தற்போதைய தி முக அரசின் ஐந்து வருட கால ஆட்சி முடியும் தருவாய் வந்து விட்டது. நான்கு ஆண்டு காலமாக புகழ்ச்சியைத் தவிர முதல்வர் எதையும் பெரிதாக சந்திக்க வில்லை, வேறு எதையும் விரும்பியதும் இல்லை. நான்கரை ஆண்டுகள் முடிந்த நிலையில், வெறும்வாய்க்கு அவுல் போட்டது போல வந்தது  ஸ்பெக்டரம் ஊழல். 'தோரயமாக' என்ற ஒரு வார்த்தை தமிழில் உள்ளது. அதை வைத்து எங்கள் அரசியல் விஞ்ஞானிகள் சும்மா கில்லி மாதிரி விளையாடுகிறார்கள். அதே 'தோரயமாக' 1.67 லட்சம் கோடிகளுக்கு ‘அதிகமா’ விற்றுருக்கலாம் என்று ஒரு திரி கிள்ளிப் போடப்பட்டது. எங்க ஊர்ல கிழவிகள் வெட்டி நியாயம் பேசுவது போல கிளம்பினர் ஜெயா. யார்யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து இந்த விஷயத்தை பூதகம் ஆக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார் .

இன்று எங்கு கண்டாலும் இரண்டே விவாதங்கள் தான். "எப்பா இம்புட்டு கோடியாமே, இத வச்சுத்தான் நமக்கு ரூ. 200  தேர்தல் அப்போ குடுக்குராங்களா!" என்பது ஒன்று, மறு பக்கம் “யாரு தான்ப்பா கொள்ளை அடிக்கலை, இந்த மனுசனாட்சும் எதாச்சும் பண்றாரு". இது என்னவாக இருந்தாலும், தமிழக அரசியல் தெரிந்தவர்கள் சொல்வார்கள் : அரசியல் பகடைகள் உருட்டப்படும் போது சாதியையும் கூட்டணியும் மட்டுமே கணக்கில் வரும். எப்படி என்று கேட்பவர்களுக்கு 2001 தேர்தல் அதிமுகவின் வெற்றியே பெரிய எடுத்துகாட்டு. சரி, அது இருக்கட்டும் இப்போ தமிழகத்தில் இன்னும் மூன்று மாத காலத்தில் என்ன நடக்க வேண்டும்? இது தான் பலரும் கேட்கும் கேள்வி.

அதிமுக ஆட்சி - காலத்தின் கட்டாயம்:
திமுக வின் கிளைகள் பெருகியுள்ளன்வோ இல்லையோ திமுக தலைமையின் குடும்பம் பறந்து விரிந்துள்ளது என்பது நிதர்சனமான உண்மை தான். தமிழக மக்களின் ஏன் இந்திய மக்களின் தேர்தல் வாக்களிப்பு எப்போதும் ‘better of the two evils’ என்றே இருக்கும்.  தமிழகத்தில் எப்போதும் இப்படி தான் . சில நேரங்களில் தீமைகளில் வலியதே நன்மையாகக் கூடத் தெரியும். 1967 தேர்தல் இதற்கு ஒரு நல்ல உதாரணம். "காமராஜர் முதல்வராக இருந்து ஜனநாயகப் படுகொலை செய்கிறார்" என்று பரப்பினர். சொந்த விஷயத்தில் M.G.ராமச்சந்திரன
(அன்றைய சூப்பர் ஸ்டார்) கழுத்தில் சுடப்பட்டார் என்பதற்காக காங்கிரஸ் ஆட்சி குறை சொல்லப்பட்டது. அரசியல் நாடகம் அரங்கேற்றப்பட்டது.  அதற்குப்பின் நடந்த ஜனநாயக கொலைகள் எல்லாம் வரலாறு. அதே சூழ்நிலை தான் இன்று. 'தமிழகத்தை காக்க வருகிற மீட்பர் ஜெயா'  என்ற மாயையை உருவாக்குகின்றனர். நான் இந்த திமுக ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிடுறேன் என்று தயவு செய்து நினைக்க வேண்டாம். அதிமுக வின் சூழ்ச்சியையே அந்த காலத்து திமுகவின் சூழ்சிக்கு ஒப்பிடவேண்டியதாகிறது.

ஏன்? என்ன சூழ்ச்சி இருக்கிறது?? இவன் என்ன பிதற்றுகிறான் என்று நினைகிறீர்களா! சரி , சற்று பின் நோக்கி சென்று யோசிப்போம். 2009 க்கு முன்பு வரை ‘ஈழம்’ என்ற சொல்லையே வெறுத்து வந்த ஜெயலலிதா, 'பிரபாகரனை தூக்கில் போட வேண்டும்' என்பதில் இருந்து,  “ஒரு போர் (இலங்கை யுத்தம்) என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்" என்று சொல்லும் வரை எதையும் விட்டு வைத்ததில்லை. தீடீர் என்று 2009 ஜனவரி பெப்ரவரிகளில் இலங்கை தமிழர்களின் போர் வாள் (?) ஆனார் ஜெயா. இலங்கைத் தமிழர்களின் படுகொலைக்குக் காங்கிரஸ் தான் காரணம் என்று சூராவெளி ஆனார். பல பேர் ஜெயலலிதா 'இலங்கை தமிழர்களின் விடிவெள்ளி', 'ஈழம் வென்றெடுப்பார்', 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்றெல்லாம் கனவுக்கோட்டை கட்டினர் . முடிவு, தேர்தல் முடிந்தது; முடிவுகள் வரும் முன்னரே தன் ஆருடத்தை பயன்படுத்தி (எந்த ஜோசியர் சொன்னாரோ?) அமைய போகிற காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு என்றார் ஜெயா.  அது எப்படி? 10 நாட்களுக்கு முன்பு வரை தமிழ் இனத்தை அழித்த காங்கிரஸ், ஆட்சிக்கு வரும்போது தோழமையாகும்? இதையெல்லாம் நாம் சிந்திக்க வேண்டும். சுயநலம், கர்வம், ஆணவம், பிராதுதனம். ரஜினி சொன்னார் போல் இதையும் தாண்டி நடக்க கூடாதது நடந்தால், தமிழ் நாட்டை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது.

என் இனிய தமிழ் இன மக்களுக்கு நியாபக மரதி அதிகம், கூடவே இரக்க குணமும், மீண்டும் ஒரு வாய்ப்பு என்ற பெரிய மனம் வேற. விழித்துக்கொள்ளுங்கள் மக்களே , இன்னொரு 1991-96 வேண்டாமே !!!!
‘better of the two evils’ என்ற சூத்திரத்தில் தி மு க பரவா இல்லையோ என்ற எண்ணமே தோன்றுகிறது.

-PPR